ஃபார்முலா 4 கார்பந்தயம் இன்று நடைபெற உள்ள நிலையில் 8 மணிக்குள் சான்றிதழ் பெறவில்லை என்றால் கார்பந்தயம் ஒத்திவைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது.
ஃபார்முலா 4 கார்பந்தயம் மலையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கின்றது. சென்னை ஐகோர்ட் அளித்திருக்கும் அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது வரை எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீடிப்பு வழங்க வேண்டும் என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தர சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். சான்றிதழ் பெற்ற பின்னரே கார்ப்பந்தயம் நடத்த முடியும் என்பதால் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் சான்று பெற 8 மணி வரை அவசர அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கின்றது. இரவு 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
9 மணி வரை அவகாசம் வழங்கும் படி அரசு தரப்பில் கோரிக்கை வைத்த நிலையில் 8 மணி வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பந்தயத்தை காண ஆர்வமுடன் வந்துள்ள நிலையில் 8:00 மணிக்குள் வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது.













