---Advertisement---

கெட்டுப்போன ஆட்டுக்கால்… ஹோட்டல்களில் அதிரடி ஆய்வு… வெளுத்தெடுத்த அதிகாரிகள்…!

By Sri
Published on: September 3, 2024
---Advertisement---

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உணவகத்தில் கெட்டுப் போன ஆட்டுக்கால்களை வைத்திருந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான உணவுகளில் ஒன்று ஆட்டுக்கால் பாயா. இடியாப்பத்தை பாயாவில் பிசைந்து சாப்பிடுவது என்பது தனி ருசியை கொடுக்கும். பரோட்டா மற்றும் சாதத்துடன் பலரும் ஆட்டுக்கால் பாயாவை சேர்த்து சாப்பிடுவார்கள். உணவகங்களில் அதிகம் விற்பனையாகும் உணவுகளில் முதலிடத்தில் இருப்பது இதுதான்.

சென்னையில் சமீப காலமாக கெட்டுப்போன இறைச்சி தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் உங்களுக்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடத்திவரப்பட்ட 1700 கிலோ கெட்டுப் போன இறைச்சி பிடிபட்டதை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை மூட்டை மூட்டையாக வைத்திருந்தது பார்த்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதை அனைத்தையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இது ஆட்டுக்கால் பாயா பிரியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கெட்டுப்போன ஆட்டுக்கால்களை ஆய்வு செய்தபோது அதில் நோய்களை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாத கணக்கில் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் குடோன்களில் மூட்டையாக போடப்பட்டிருந்த ஆட்டுக்கால் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஒரு வேலை இந்த கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் ஹோட்டலில் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டால் இதை சாப்பிடுபவர்களுக்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்து இருக்கின்றார். கெட்டுப்போன இறைச்சிகளை சமைக்கும் போது உணவு கெட்டுப் போய்விடும். சில நேரங்களில் நாம் ஹோட்டல்களில் சாப்பிடுவது வயிற்று உப்பிக்கொண்டு வலி ஏற்படும்.

பின்னர் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படும். அந்த வகையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை வைத்து சமைக்கப்படும் ஆட்டுக்கால் பாயா விஷமாகும் ஆபத்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். எனவே ஹோட்டல் உணவுகளில் எப்போதும் கவனம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Sundeep Kishan and director Jason Sanjay discussing the Sigma movie project.

இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!