---Advertisement---

எஃப்.ஐ ஆர் படத்துக்கு வெளிநாடுகளில் தடை- இந்தியாவில் தெலுங்கானாவிலும் தடை கேட்கும் ஓவைஸி கட்சி

Published on: February 12, 2022
---Advertisement---

விஷ்ணு விஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் படம் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய இளைஞனை தீவிரவாதியாக சித்தரிப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படம் நேற்று ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் தெலுங்கானாவில் ஓவைஸி கட்சி இப்படத்தை எதிர்த்துள்ளது.

மேலும் படத்தைத் தெலுங்கானாவில் திரையிடக் கூடாது என நெருக்கடி கொடுத்து வருகிறது.

இது குறித்து அக்கட்சியின் எம்எல்ஏக்கள் சயீது அகமது பாஷா காத்ரி, ஜாஃபர் ஹுசைன் மீரஜ், கவுசர் மொஹிதீன் ஆகியோர் அமைச்சர் டி.ஸ்ரீநிவாச யாதவை சந்தித்து எஃப்.ஐ.ஆர் படத்தைத் திரையிட ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து மனு அளித்துள்ளனர்.
அந்தப் படத்தின் போஸ்டரில் ‘ஷதா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் இது இஸ்லாம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.

தெலுங்கானாவைப் போலவே மலேசியா, குவைத், கத்தாரிலும் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.