தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்நிலையில் அதிமுகவினர் ஒரு பக்கம் ஊர் ஊராக கூட்டம் நடத்தி வருகின்றனர். இது போல திமுக தலைவர் ஸ்டாலினும் ஊர் முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகள் விசயமாக முதலமைச்சருடன் விவாதிக்க தயாரா என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இன்று ஒரு அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்
ஊழல் நாற்றம் வீசும்
விவாதத்திற்கு சவடால் விடுகிறார். CBI விசாரணைக்கான தடையை நீக்கி, அமைச்சரவை மீதான எனது புகார்களை விசாரிக்க ஆளுநரின் அனுமதி பெற்றுவிட்டு இடம் – நேரம் குறியுங்கள். உங்கள் ஊழல்களைத் தோரணம் தொங்கவிட ஒற்றை ஆளாக நான் ரெடி! நீங்கள் ரெடியா Mr.பழனிசாமி?









