தனுஷினுடைய சகோதரர் செல்வராகவன். வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வந்தவர் . தனுஷை வைத்து இவர் இயக்கிய “காதல் கொண்டேன்”படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து இவர்களை கோடம்பாக்கத்தில் முக்கிய புள்ளிகளக மாற்றியது. “காதல் கொண்டேன்” படத்தின் மூலமே தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்தார் செல்வ ராகவன்.

” 7-ஜி ரெயின்போ காலனி”படம் காதலை வேறு பரிமாணத்தில் சொல்லியது. கதிர், சோனியா அகர்வாலின் நடிப்பு அந்த கால காதலர்களை மிகவும் கவர்ந்தது. சில நாட்களில் சோனியா அகர்வாலையே மணமுடித்து கொண்டார் செல்வ ராகவன்.
தொடர்ந்து தனுஷை வைத்து “புதுப்பேட்டை”, மயக்கம் என்ன” படங்களை எடுத்திருந்தார். ஆனால் தனுஷ், செல்வராகவன் இருவருக்குமே அது பின்னடைவையே பெற்றுக்கொடுத்தது. பழங்காலம், நிகழ்கால கதையைக் கொண்டு வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” சறுக்கலையே தந்தது.
இப்படி தோல்வி அவரை தொடச்சியாக துரத்த, அவரால் இயக்குனராக தொடர்ந்து பிரகாசிக்க முடியவில்லை. தற்பொழுது நடிப்பில் நடிகனாக தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பில் இறங்கி விட்டார். விஜயுடன் “பீஸ்ட் படத்திலும், மார்க் ஆன்டனி” படத்திலும் நடித்தார்.
“ஐயோ இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே. இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேன என ஒரு போதும் கலங்காதீர்கள். புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.
இந்த நொடிதான் பிறந்தது போல நினைத்து கொள்ளுங்கள்”என்று திடீரென ஒரு தத்துவத்தை தழும்ப விட்டிருக்கிறார் தனது வலைத்தள பக்கத்தில். ஏன் இவர் இப்படி சொல்லியிருக்கிறார்? என்ன காரணமாக இருக்கலாம்? என யோசித்து வருகிறதாம் கோடம்பாக்கம்..









