இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இரண்டாவதாகக் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து குழந்தையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முக்கியமான உருவாகி வரும் பா ரஞ்சித் அடுத்ததாக சல்பேட்டா எனும் குத்துச்சண்டையை மையப்படுத்தி ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார். இதற்கான பணிகள் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு ஒரு புதுவரவாக அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மிளிரன் என்ற பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையோடு ரஞ்சித் இருக்கும் புகைப்படம் வெளியாக திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.









