சின்னத்திரை நடிகை சித்ரா இவர் விஜய் டிவியில் வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் பிரபலமானவர். மற்றும் ஜாலியாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் செய்யக்கூடிய மிக அதிரடியான ஆன பெண் இவர்.
கடந்த மாதம் 9ம் தேதி தான் தங்கி இருந்த ஹோட்டலில் இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது நடிகர் நடிகைகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
சித்ராவுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில் அவருடன் ஹோட்டலில் தங்கி இருந்த கணவர் ஹேமந்த் தான் இதற்கு காரணம் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இப்படி சித்ராவின் மரணம் குறித்து தொடர் மர்மம் நிலவி வருகிறது.இந்நிலையில் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் சென்னை கமிஷனர் திரு மகேஷ்குமார் அகர்வால்.







