ரஜினிகாந்துடன் 80கள் தொட்டே தொடர்ந்து நடித்து வருபவர் சரண்ராஜ். ரஜினியின் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்தவர் சரண்ராஜ்.
95ம் ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் ப்ளாக் பஸ்டர் படமான பாட்ஷாவில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக அன்வர் பாட்ஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரம்தான் படத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த சரண்ராஜ் கதாபாத்திரமான பாட்ஷா கதாபத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியவர் மம்முட்டியாம் அவர் தளபதி படத்தில் நடித்ததால் தொடர்ந்து அதே போன்று வேண்டாம் என்று விட்டு விட்டார்களாம். இதை சரண்ராஜ் சமீபத்திய தனது பேட்டியில் கூறியுள்ளார்









