தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜீன் ரெட்டி படத்தின் உரிமையை வாங்கிய இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் , அந்த படத்தின் கதையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தனர். இப்படத்தை இயக்குனர் பாலா இயக்கினார்.
தெலுங்கு அர்ஜூன் ரெட்டி போல் இல்லாது இப்படத்தில் பல மாற்றங்களை செய்து படம் எடுத்து முடிக்கப்பட்டது. அனைத்து வேலைகளும் முடிந்து வர்மா ரிலீசுக்கு தயாரான நிலையில் படத்தை தயாரித்த இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை கைவிடுவதாகவும் படம் சரியாக வரவில்லை அதனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது எனவும் அறிவித்தது. பின்பு தெலுங்கில் கிரிசய்யா என்ற இயக்குனரை வைத்து அதே துருவ் விக்ரமை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் படம் மீண்டும் இயக்கப்பட்டது. அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஓடிடி தளங்களில் படங்கள் ஓரளவு வெளியாவதை தொடர்ந்து பாலா இயக்கிய ஏற்கனவே கைவிடப்பட்ட வர்மாவும் வந்தது.
படத்தை பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது என இப்போதுதான் புரிகிறதாம். படத்தின் காட்சியமைப்புகள் எதுவும் சரியாக இல்லையாம். தெலுங்கு அர்ஜூன் ரெட்டியை குழப்பி வைத்திருக்கிறார்களாம். இப்படத்தில் புதிதாக ஈஸ்வரிராவ் கதாபாத்திரம் மட்டுமே புதுமையாக உள்ளதாம்.
இதனால் பாலா வை கேலி செய்கிறேன் என வர்மா #varmaa என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர்.







