ஐயப்பனுக்குரிய முக்கிய விரதமான கார்த்திகை விரதம் துவங்க இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் , மகர விளக்கு, மண்டலபூஜை காலங்களில் தினமும் கூட்டம் அலைமோதும் நிலை உள்ளது.
தற்போதைய கொரொனா காலத்தில் அதிக பக்தர்களை ஸ்வாமி சன்னிதானத்தில் தரிசனம் செய்ய விட முடியாது என்ற சூழலில் தேவஸ்வம் போர்டு மற்றும் அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி கார்த்திகை மாதம் துவங்கி முதலில் வரும் மண்டல பூஜை காலத்திலும் பின்பு வரும் மகர ஜோதி காலத்திலும் தினசரி 1000 பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.













