நடிகர் விஜயகுமாரின் வாரிசுதான் அருண் விஜய் என்பது பலருக்கும் தெரிந்த விசயம்தான். சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் சினிமாவில் நீண்ட காலம் போராடி தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்தவர் அருண் விஜய்.
அவர் தன்னுடைய தந்தை குறித்து மனம் திறந்தது.தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில், ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவர்கள் எனது தந்தையும் தாயும் என்பதில் பெருமை அடைகிறேன். தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்!! நமது கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம்.. என கூறியுள்ளார்.








