தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் வலம் வருவார் என்று எதிர்பார்க்க, இந்தி தெலுங்கு என்ற பிற மொழிகளில் பறந்துவிட்டார் நடிகை சமீரா ரெட்டி.
பின்பு இவருக்கு திடீரென்று திருமணம் முடிந்தது. இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை இருக்கும் நிலையில், இவருக்கு சில மாதத்திற்கு முன்னால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து, இவர் சோசியல் மீடியாவில் தாய்மார்கள் குறித்த ரசிகர்களின் சந்தேகங்களுக்கும், குழந்தைகளுடன் அவர் எப்படி இனிமையாக இருக்கிறார் என்பதைப் பற்றியும் அடிக்கடி பகிர்வது உண்டு.
இதை அடுத்து இவரின் அழகிய குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் ஒரு கலக்கு கலக்கியுள்ளது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்ன இவர்கள் வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டியின் குழந்தைகளா? என்று பிரமிப்பில் உள்ளனர்.













