கோலிவுட்டின் எவர்கிரீன் கிளாமர் குயினான நடிகை மாளவிகா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்துகொண்ட அவர், தனது சினிமா கேரியரில் இதுவரை நடக்காத ஒரு சுவாரஸ்யமான விஷயம் இந்தப் படத்தில் நடந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
மாளவிகா இதுவரை 42 படங்களில் நடித்துள்ள நிலையில், முதன்முறையாக இந்தப் படத்தில் தான் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளாராம். இதற்கு முன்பு நடித்த அனைத்துப் படங்களிலும் அவருக்கு மற்றவர்கள் தான் குரல் கொடுத்துள்ளனர். “என் குரல் மீது நம்பிக்கை வைத்து என்னை டப்பிங் பேச வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்குத் தான் இந்த கிரெடிட் சேரும்” என மாளவிகா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தின் பெயர் ‘வாழ மீன்’ என்றும் மாளவிகா கலகலப்பாகக் கூறியுள்ளார்.
தனது கோ-ஸ்டார் பிரதீப் ரங்கநாதன் ஒரு எக்ஸலன்ட் நடிகர் என்றும், இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் என்றும் மாளவிகா பாராட்டியுள்ளார். பல போராட்டங்களைக் கடந்து ரிலீஸாகும் இந்தப் படம் தனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். 42 படங்களுக்குப் பிறகு மாளவிகா சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் மாளவிகாவின் ‘வாழ மீன்’ கதாபாத்திரம் திரையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். விக்னேஷ் சிவனின் மேக்கிங்கில் மாளவிகாவின் ரீ-என்ட்ரி கோலிவுட்டில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.













