---Advertisement---

5 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை… அரைகுறை ஆடையுடன் தப்பி வந்து உதவி கேட்ட பதற வைத்த வீடியோ…!

By Sri
Published on: July 24, 2024
---Advertisement---

இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அவர் தப்பி வந்து உதவி கேட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நாளை மறுநாள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுகின்றது. இந்நிலையில் பாரிஸ் நகரில் 25 வயதான ஆஸ்திரேலியா பெண் 5 நபர்களால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த பெண் இத்தனை வன்கொடுமை செய்த அந்த ஐந்து பேரிடம் இருந்து தப்பித்து உணவகம் ஒன்றில் நுழைந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருக்கின்றது. பலத்த காயங்களுடன் உடையை தலைகீழாக அணிந்து அளகோலமாக வந்த அந்த பெண் உணவகத்தின் நுழைந்து அங்குள்ளவர்களிடம் தன்னை காப்பாற்றும்படி மன்றாடி கேட்டார்.

கடந்த ஜூலை 19ஆம் தேதி இரவு அந்த ஆஸ்திரேலியா பெண் பாரிஸ் நகரின் பிரபலமான பகுதியான மகுடின் ரோஜ் பகுதியின் பார் மற்றும் கிளப்களில் சுற்றித்திரிந்து இருக்கின்றார். அதை நோட்டமிட்ட ஐந்து பேர் காலை 5 மணி அளவில் அந்தப் பெண்ணை தனியாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். பிறகு அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண் ஒரு உணவகத்தில் சென்று தஞ்சம் அடைந்தார் .

அந்த பெண்ணை துரத்தி வந்த ஐவர் அந்தப் பெண் உணவகத்திற்குள் நுழைந்த உடனே அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வன்புணர்வால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அந்த பெண் இன்னும் குழப்பு நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் அந்த 5 பேர் யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.