ஏவிஎம் நிறுவனம் பொன்விழா கண்ட நிறுவனம் அந்தக்கால களத்தூர் கண்ணம்மா முதல் சிவாஜி வரை தங்களது நிறுவனமான ஏவிஎம் புரொடக்சன்ஸ் மூலம் தயாரித்து பெயர் பெற்றது இந்த நிறுவனம்.
தன் தந்தை மெய்யப்ப செட்டியாரையே அனைத்திற்கும் உதாரணமாக கூறும் ஏவிஎம் சரவணன் அவர்கள் சொன்ன அந்த ஏவிஎம் மூன்றேழுத்துதான் எல்லாம் என தன் தந்தை சொன்னதை பாலபாடமாக ஏற்று இவ்வளவு வருடங்கள் சீரிய முறையில் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது இவரது மகன் எம்.எஸ் குகன் தான் நிர்வாகத்தை கவனித்து வருகிறாராம்.
தனக்கு சரியாக பணம் கூட எண்ண வராது என எளிமையாக பேசும் சரவணன் எங்கள் நிறுவனத்தின் படங்களில் கதை விவாதங்களில் மட்டுமே நான் அந்தக்காலங்களில் இருந்து அதிகம் பங்கேற்பேன் என கூறியுள்ளார். பணம் யாரும் கொடுத்தாலும் கூட அலுவலர்களிடம் கொடுத்து எவ்வளவு பணம் என கவுண்ட் பண்ணி சொல்லுங்க என்று சொல்வாராம்.
அந்தக்காலங்களில் படம் தயாரித்த முறை வேறு. இப்போது நிறைய கார்ப்பரேட் கம்பெனிகள் பெருகிவிட்டது இது மிகப்பெரிய ஆபத்தை சினிமா துறைக்கு தரும் என சரவணன் கூறியுள்ளார். புதிதாக படம் தயாரிப்பவர்கள் நிதானமாகத்தான் தயாரிக்க வேண்டும் தன் தந்தை உதாரணமாக ஒரு விசயம் சொல்வாராம் ஒருவன் படம் ரிலீஸ் ஆகலையேன்னு மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ரிலீஸ் செய்ய முயற்சி செய்யலாம் தவறில்லை. ஆனால் படம் எடுப்பதற்கே மனைவியின் நகைகளை வைக்க கூடாது என தெளிவாக ஒரு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.








