இரண்டு வருடங்களுக்கு முன் சிம்பு நடிப்பில் மாநாடு படம் துவக்குகிறோம் என முதன் முதலில் செய்திகள் வந்தன. அந்த செய்தி வந்த நேரத்தில் இருந்து படப்பிடிப்பு துவங்கப்படும் துவங்கப்படும் என்ற செய்திகளையே அதிகம் செய்தி ஊடகங்களில் எழுத வேண்டியுள்ளது.
காரணம் என்னவென்றால் மாநாடு படப்பிடிப்பு முதன் முதலில் அறிவித்த உடன் தொடங்கவில்லை.சிம்பு செய்த கால்ஷீட் குளறுபடிகள் இன்னும் பல குளறுபடிகளால் படப்பிடிப்பை உடனடியாக தொடங்க முடியவில்லை.
படம் ட்ராப் ஆகும் நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவது சிம்பு கரெக்டாக வந்து நடிப்பார் என பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
வெங்கட் பிரபு இயக்கி வந்த இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வந்தார். படப்பிடிப்பு நடந்து வந்த நேரத்தில் பெரும் சோதனையாக கொரோனா பாதிப்புகள் வந்து விட்டது. அதனால் படப்பிடிப்பு தடை பட்ட நிலையில் தற்போது நவம்பர் முதல் வாரத்தில் இருந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடைகள் உடைத்து, கொரோனா பாதிப்புகள் கடந்து… #மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்குகிறோம்.
#STR #SilambarasanTR @vp_offl @kalyanipriyan @iam_SJSuryah @Premgiamaren @Anjenakirti @johnmediamanagr— sureshkamatchi (@sureshkamatchi) October 6, 2020
தடைகள் உடைத்து, கொரோனா பாதிப்புகள் கடந்து… #மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்குகிறோம்.
#STR #SilambarasanTR @vp_offl @kalyanipriyan @iam_SJSuryah @Premgiamaren @Anjenakirti @johnmediamanagr— sureshkamatchi (@sureshkamatchi) October 6, 2020







