இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முதல் படத்தில் சுந்தர்சி பாபு இசையமைத்தார் பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே படத்திலும் சுந்தர் சி பாபு இசையமைத்தார். மிஷ்கின் தன் படங்களில் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அவர் இயக்கிய நந்தலாலா படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். பிறகு நடு நடுவில் வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றுவார். யாருடன் பணியாற்றினாலும் இசையை சிறப்பாக வாங்கி விடுவார்.
இளையராஜாவுடனே அதிகமான படங்களில் பணியாற்றியுள்ளார் . சமீபத்தில் வந்த சைக்கோ படம் வரை இளையராஜாவுடன் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இளையராஜா பெயரின் முன் முன்னணி இசை என்று வித்தியாசமாக பெயரிட்டு பெருமைப்படுத்தினார்.
இவர் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். கார்த்திக் ராஜா பின்னணி இசையில் பிரித்து விடுவார் என்பதால் மிஷ்கின் கார்த்திக் ராஜா கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்கள் அதிகம் காத்திருக்கிறார்கள்.
மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.









