---Advertisement---

அம்மா உணவகத்தில் உணவுக்குக் கட்டணம்! இன்றுமுதல் அமல்!

By Sri
Published on: May 4, 2020
---Advertisement---

அம்மா உணவகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக சில வாரங்களாக வழங்கப்பட்டு வந்த இலவச உணவு இனிமேல் கட்டணத்துடன் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலைய அறிவிப்பின் படி 3300 ஐ தாண்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக ஆதரவற்றவர்களுக்கும், பிச்சைக் காரர்களுக்கும் மற்றும் ஏழை மக்களுக்கும் உதவும் விதமாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக முதல்வரின் பல இடங்களில் உள்ள 11 அம்மா உணவகங்கள், புற நகரில் உள்ள 4 அம்மா உணவகங்களில் 2 வேளை உணவு இலவசம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்றுமுதல் ஊரடங்கு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.