இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்து 3 பேர் உயிரிழந்த நிலையில் விபத்து எப்படி நடந்தது எனப் படக்குழுவினர் நடித்துக் காட்டியுள்ளனர்.
கடந்த மாதம் 19 ஆம் தேதி பூந்தமல்லியில் நடந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர். இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்துவரும் விசாரணை கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
இது சம்மந்தமாக கமல் ஆஜராகி மூன்று மணிநேரத்துக்கும் விளக்கமளித்தார். ஆனால் விசாரணை நடத்தப்பட்ட விதத்தில் கமலுக்கு ஆட்சேபணை இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், விபத்து குறித்து நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து வற்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்த நீதிமன்றம் கமல் விசாரணைக்கு ஆஜராகத் தேவையில்லை எனக் கூறியது.
அதனால் இன்று கமலைத் தவிர மற்றவர்கள் படப்பிடிப்புத் தளத்தில் ஆஜராகி விசாரணை அதிகாரிகளிடம் விபத்து எப்படி நடந்தது என நடித்துக் காட்டியுள்ளனர். அதை அதிகாரிகள் வீடியோவாக காட்சிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அடுத்த கட்ட விசாரணைகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.







