தமிழ் சினிமாவுல எத்தனையோ கமர்ஷியல் படங்கள் வந்தாலும், சில திரைப்படங்கள் நம்ம கண் முன்னாடி வாழ்ற எளிய மக்களோட வலிகளையும் வேதனைகளையும் அப்படியே எதார்த்தமா பேசி நம்ம மனசுல காலம் கடந்து நின்னுகிடும். அந்த வகையில, இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்துல வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் உரைய வச்ச ஒரு கிளாசிக் மாஸ்டர்பீஸ் படம் தான் அங்காடி தெரு. தற்பொழுது இந்த படத்தோட ஆரம்பகட்ட வேலைகள் குறித்து இயக்குநர் வசந்தபாலன் பகிர்ந்துகொண்ட ஒரு த்ரோபேக் இன்டர்வியூ சமூக வலைத்தளங்கள்ல செம வைரலாகி ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்கு.
இயக்குநர் வசந்தபாலன் அங்காடி தெரு படத்தோட கதையை முதன்முதல்ல எழுதி முடிச்ச உடனே, அதை நம்ம தமிழ் சினிமாவின் அசாத்திய நடிப்பு நாயகனான தனுஷ்கிட்ட தான் போய் சொல்லிருக்கார். கதையைக் கேட்ட தனுஷுக்கு லைன் ரொம்பவே பிடிச்சுப் போயிருந்தாலும், அவர் வசந்தபாலனுக்கு ஒரு நேர்மையான அட்வைஸ் கொடுத்திருக்கார். தான் இந்த படத்துல நடிச்சா, கமர்ஷியல் மார்க்கெட் பிரஷர் காரணமா படத்துல சில மாஸ் மற்றும் ஹீரோயிசம் எலிமெண்ட்ஸை திணிக்க வேண்டிய கட்டாயம் கண்டிப்பா வரும்னு தனுஷ் சொல்லிருக்கார்.

இந்த எதார்த்தமான கதைக்கு எந்தவித ஹீரோயிசமும் தேவையில்லை, அப்போதான் இதோட ஆன்மா அப்படியே இருக்கும்னு ஃபீல் பண்ணிய தனுஷ், தனக்கு பதிலா ஒரு புதிய முகத்தை வச்சு இந்த படத்தை எடுத்தா ஆடியன்ஸ் மத்தியில இதோட இம்பேக்ட் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கும்னு சஜஸ்ட் பண்ணிருக்கார். தனுஷ் கொடுத்த அந்த மாஸான ஐடியாவால தான் இந்த ப்ராஜெக்ட் அப்படியே வேற திசையில நகர்ந்து, அதுக்கப்புறம் புதுமுகங்கள் நடிச்சு ஒரு எவர்கிரீன் படமா இண்டஸ்ட்ரில மாறுச்சு.
ஒரு டாப் ஹீரோவா இருந்துட்டு கதையோட தன்மை கெடக்கூடாதுன்னு தனுஷ் எடுத்த அந்த முடிவு தான் அங்காடி தெரு படத்தோட பிரம்மாண்ட வெற்றிக்கு அஸ்திவாரமா அமைஞ்சிருக்குன்னு நெட்டிசன்கள் தற்பொழுது தனுஷை செமயா பாராட்டி வர்றாங்க.













