---Advertisement---

பெயர், குரல், புகைப்படம் பயன்படுத்த அதிரடி தடை; நீதிமன்றத்தை நாடிய பிரபல முன்னணி நடிகர்!

Published on: May 29, 2026
Actor Naga Chaitanya wins personality rights case in Delhi High Court against unauthorized AI use and merchandising.
---Advertisement---

தொழில்நுட்ப வளர்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள் மற்றும் குரல்களை செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தவறாகப் பயன்படுத்தி அவதூறு பரப்பும் சம்பவங்களும் தற்பொழுது பெரிய அளவில் அதிகரித்து வருகின்றன. இதனால் திரைத்துறையினர் தங்களது தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க சட்ட ரீதியான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றனர். அந்த வகையில், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடி ஒரு மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பெற்றுள்ளார்.

பிரபல முன்னணி நடிகர் நாக சைதன்யா தங்களது தனிப்பட்ட அடையாளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நடிகர் நாக சைதன்யாவின் பெயர், புகைப்படம் மற்றும் அவரது குரல் ஆகியவற்றை முறையான அனுமதியின்றி பிறர் வணிக ரீதியாகவோ அல்லது வேறு எந்தவொரு தேவைக்கோ பயன்படுத்தக் கூடாது என்று அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சமீபகாலமாக சில அமைப்புகள் மற்றும் நபர்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தங்களது புகைப்படங்களை முற்றிலும் வித்யாசமாக உருவாக்கி, அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி வருவதாக நாக சைதன்யா தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல், தங்களது முறையான எவ்வித அனுமதியும் பெறாமல் பல்வேறு டீ-சர்ட்டுகள் மற்றும் வணிகப் பொருட்களில் தங்களது புகைப்படங்களை அச்சிட்டு லாபம் சம்பாதித்து வருவதாகவும் அவர் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த மனுவை முழுமையாக ஆராய்ந்த நீதிமன்றம், ஒரு பிரபலத்தின் தனிப்பட்ட அடையாளங்களையும் ஆளுமை உரிமைகளையும் அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும் என்பதை உறுதி செய்து இந்த அதிரடித் தடையை விதித்துள்ளது. ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் அமிதாப் பச்சன், அனில் கபூர் போன்ற முன்னணி சீனியர் நடிகர்கள் இது போன்ற ஆளுமை உரிமைப் பாதுகாப்பைப் பெற்றுள்ள நிலையில், தற்பொழுது தென்னிந்திய திரையுலகில் நாக சைதன்யாவும் இந்த முக்கிய உத்தரவைப் பெற்றுள்ளார்.

டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த அதிரடி உத்தரவு தற்பொழுது சினிமா வட்டாரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகவும் விறுவிறுப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்ப தவறுகளுக்குப் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த சட்ட ரீதியான உத்தரவு குறித்த அடுத்தடுத்த சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துக்களையும், ஆதர்வுகளையும் தெரிவித்து வருகின்றன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.