பான் இந்திய லெவல்ல பாக்ஸ் ஆபீஸை உலுக்கி எடுத்த ‘KGF’ சீரிஸ் படங்களோட அடுத்த பார்ட்டான ‘கேஜிஎப் 3’ எப்போ வரும்னு உலகம் முழுக்க இருக்குற சினிமா ஃபேன்ஸ் எல்லாரும் தற்பொழுது வரை செம ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அதே நேரத்துல, பிரபாஸோட ‘சலார்’ படத்தோட அடுத்த பாகமும் லைன்-அப்ல இருக்கு. இந்த நிலையில, இந்த இரண்டு மெகா பட்ஜெட் படங்களோட தற்போதைய நிலவரம் என்னங்கிறத பத்தி பிரம்மாண்ட இயக்குநர் பிரசாந்த் நீல் (Prashanth Neel) அவரோட லேட்டஸ்ட் பேட்டியில ஓப்பனா உடைச்சுப் பேசியிருக்காரு. இது இப்போ சினிமா வட்டாரங்கள்ல பயங்கர விவாதத்தை கிளப்பியிருக்கு.
இப்போ ஜூனியர் என்டிஆரோட ‘டிராகன்’ (Dragon) பட வேலைகள்ல பிஸியா இருக்குற பிரசாந்த் நீல், அந்த படத்தை முடிச்ச உடனே நேரா பிரபாஸோட ‘சலார் 2’ (Salaar 2) படத்ததான் கையில் எடுக்கப் போறாராம். இதுபத்தி அவர் பேசும்போது, “டிராகன் படத்தை முடிச்ச கையோட, அடுத்து பிரபாஸ் ஃபேன்ஸ் வெறித்தனமா எதிர்பார்த்துட்டு இருக்குற ‘சலார் 2’ படத்ததான் இயக்க பிளான் பண்ணியிருக்கேன். இப்போ நான் மட்டுமில்ல, நம்ம ராக்கி பாய் யாஷ் (Yash) அவர்களும் டாக்ஸிக் மாதிரியான படங்களோட ஷூட்டிங்ல ரொம்பவே பிஸியா நடிச்சிட்டு வர்றாரு” அப்படின்னு சொல்லியிருக்காரு.
இதனால, யாஷ் நடிக்கும் ‘கேஜிஎப் 3’ (KGF 3) படத்தை இப்போதைக்கு ஆரம்பிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னும், அதுக்கு இன்னும் பல வருஷங்கள் ஆகும்னும் பிரசாந்த் நீல் பக்கா கிளாரிட்டி கொடுத்துட்டாரு. “நாங்க கேஜிஎப் 3 படத்தை பத்தி யோசிக்கிறதுக்கே இன்னும் சில வருஷங்கள் ஆகும். அதுக்கு ரொம்பவே கால அவகாசம் தேவைப்படும்” அப்படனு அவர் ஓப்பனா சொன்னது கேஜிஎப் ஃபேன்ஸுக்கு சற்றே ஏமாற்றத்தை தந்தாலும், அதுக்கு முன்னாடியே பிரபாஸ் – பிரசாந்த் நீல் காம்போவோட ‘சலார் 2’ ஆட்டம் தியேட்டருக்கு வரப்போறது இப்போ செம டாக்கின் பாயிண்ட்டா மாறியிருக்கு.
அடுத்த சில வருஷங்களுக்குப் பிரசாந்த் நீலோட கால்ஷீட் ‘டிராகன்’ மற்றும் ‘சலார் 2’ படங்களுக்கே கரெக்டா இருக்கும் போல, அதனால கேஜிஎப் 3 அப்டேட்டை ஃபேன்ஸ் இப்போதைக்கு மூட்டை கட்டி வைக்க வேண்டியதுதான். பிரசாந்த் நீலோட இந்த அதிரடி நேர்காணல் விபரங்கள் தற்பொழுது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா பிரியர்கள் மத்தியிலும் செம ஸ்பீடா பரவி பயங்கர ட்ரெண்டாகி வருது.













