தமிழ் திரையுலகில் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’ போன்ற பிளாக்பஸ்டர் மற்றும் ட்ரெண்ட்செட்டர் திரைப்படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj). ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா எனப் பல டாப் ஸ்டார்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தனது அடுத்த மைல்கல் திரைப்படத்திற்கான ஒரு இமாலய மெகா அப்டேட்டை வெளியிட்டு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பாலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான “சீக்யா எண்டர்டெயின்மெண்ட்” (Sikhya Entertainment) நிறுவனத்துடன் இணையும் தனது புதிய படத்திற்காக முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் (Isaignani Ilaiyaraaja) கைகோர்த்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தள பக்கங்களில், “ஒரு கனவு… ஒரு ஆசீர்வாதம்…” (A Dream…. A Blessing… ❤️) என்ற நெகிழ்ச்சியான வாசகத்துடன், இளையராஜாவிடம் ஆசி பெறும் ஒரு கவித்துவமான வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போதைய சோசியல் மீடியாவின் மிகப்பெரிய ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.
View this post on Instagram
இந்தத் திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் திரைப்பயணத்தில் 10-வது திரைப்படமாகவும், அதே நேரத்தில் இசைஞானி இளையராஜாவின் 1540-வது திரைப்படமாகவும் (Ilaiyaraaja 1540) அமைந்திருப்பது இதன் ஆகச்சிறந்த சிறப்பம்சமாகும். இதனாலேயே இப்படத்தின் அறிவிப்பிற்கு #Dream10Blessing1540 என்ற பிரத்யேக ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாகத் தனது படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் அல்லது அனிருத் ஆகியோருடன் மட்டுமே அதிகம் பயணிக்கும் கார்த்திக் சுப்பராஜ், முதன்முறையாகத் தனது வாழ்நாள் கனவாக இசைஞானியின் கம்பீரமான மெலடி மற்றும் பின்னணி இசைக்குள் நுழைய உள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவின் சீக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த பான்-இந்தியப் படம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே ஒட்டுமொத்த கோலிவுட்டும் கொண்டாடி வருகிறது. திரையுலகின் இரு வேறு தலைமுறை ஜாம்பவான்களான கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இளையராஜாவின் இந்த அன் எக்ஸ்பெக்டெட் கூட்டணி அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பயங்கர குஷிப்படுத்தியுள்ளது. படத்தின் நாயகன் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.













