---Advertisement---

முகேன் நீ அனாதை இல்லை… நிறைய அன்பு காத்திருக்கிறது… பாசமழை பொழிந்த ரேஷ்மா (வீடியோ)

By Sri
Published on: September 30, 2019
mugen
---Advertisement---

பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள நடிகை ரேஷ்மா முகேனுக்கு ஆறுதல் கூறும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கவின், தர்ஷன் இருவரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் என 4 பேர் மட்டுமே உள்ளனர்.

இதைத் தொடந்து பிக்பாஸ் போட்டியாளர்களாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உள்ளே வந்த ரேஷ்மா, பாத்திமாபாபு, மோகன் வைத்தியா மற்றும் மீரா ஆகியோர் திடீர் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், முகேனுக்கு நடிகை ரேஷ்மா ஆறுதல் கூறும் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்து. எல்லோருக்கும் கஷ்டங்கள் இருக்கிறது. உனக்கு யாருமில்லை என கவலைப்படாதே. உனக்கு வெளியே நிறைய அன்பு காத்திருக்கிறது. எனவே, தைரியமாக விளையாடு’ என அவர் கூறும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.