தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் பிரசாந்த், தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு செம்ம மாஸான செய்தியை கொடுத்துள்ளார். ‘அந்தகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் ‘ரஞ்சன் – தி அட்வகேட்’ (RANJAN the advocate) என்ற படத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இது ஒரு பக்கா ரூட்டட் கோர்ட் டிராமா என்பது படத்தின் போஸ்டரைப் பார்க்கும்போதே தெரிகிறது.
இந்த படத்திற்கு இசை அசுரன் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தியாகராஜன் – பிரசாந்த் – ஜிவி பிரகாஷ் என ஒரு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஒரு பெயின்ஃபுல் லவ் ஸ்டோரி மற்றும் உணர்ச்சிகரமான நீதிமன்ற காட்சிகளுடன் இந்த படம் உருவாக உள்ளது.

சமீபகாலமாக பிரசாந்த் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் ‘ரஞ்சன்’ படமும் அவருக்கு ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகத்தில் நடக்கும் சில முக்கியமான பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த கோர்ட் டிராமா கதையை இயக்குநர் தியாகராஜன் செதுக்கியுள்ளார்.
இந்த படத்தில் தேவயானியின் மகள் இனியா ராஜகுமரன் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரசாந்தின் பிறந்தநாள் பரிசாக வெளியான இந்த அப்டேட் இப்போது சோஷியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டிங். வக்கீல் உடையில் பிரசாந்தை பார்க்க அவரது ரசிகர்கள் இப்போதே ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்தத் திரைப்படம் 2025-ல் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ‘Court vs A Nobody’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.













