தென்னிந்திய சினிமாவில் செம பிஸியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. இப்போ இருக்கிற டிஜிட்டல் உலகத்துல ஏஐ (AI) டெக்னாலஜி எந்த அளவுக்கு வளர்ந்திருக்கோ, அதே அளவுக்கு ஆபத்தும் அதிகமாயிருக்குன்னு கீர்த்தி ஷெட்டி இப்போ ஓப்பனா பேசியிருக்காங்க. சமீபத்துல இவரோட போட்டோவை யாரோ ஒருத்தர் ஏஐ மூலமா மார்பிங் பண்ணி, ஒரு ஆளு கூட நெருக்கமா இருக்குற மாதிரி சோஷியல் மீடியாவில பரப்பிவிட்டுட்டாங்க. இந்த போட்டோவை பார்த்ததும் அவங்க அம்மாவே நிஜம்னு நம்பி பயங்கரமா ஷாக் ஆகிட்டாங்களாம். இது தான் இப்போ சினிமா வட்டாரத்துல பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கு.
இந்த போட்டோ ஃபேக்-ன்னு தெரியாம கீர்த்தியோட ஃபேமிலி ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. “என்னை மாதிரி இருக்குற பிரபலங்களுக்கே இந்த நிலைமைன்னா, சாதாரண பொண்ணுங்களோட பாதுகாப்பு என்னவாகும்? அவங்க போட்டோவை யாராவது இப்படி பண்ணா அவங்க எப்படி சமாளிப்பாங்க?”ன்னு கீர்த்தி ஷெட்டி ரொம்ப சீரியஸா கேள்வி கேட்டிருக்காங்க. சோஷியல் மீடியாவில எது உண்மை, எது பொய்-ன்னு கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு இந்த ஏஐ ஆக்கிரமிப்பு அதிகமாயிடுச்சுன்னு அவங்க வருத்தப்பட்டு சொல்லிருக்காங்க.
தொழில்நுட்பத்தை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தாம, மத்தவங்களோட பெர்சனல் வாழ்க்கையை கெடுக்கிறதுக்காக ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கு. பிரபலங்களோட முகத்தை ஆபாச வீடியோ அல்லது போட்டோவுல ஒட்டுற இந்த “டீப் ஃபேக்” கலாச்சாரம் இப்போ ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு. இதுக்கு சீக்கிரமா ஒரு கடிவாளம் போடலைன்னா நிலைமை இன்னும் மோசமாகும்னு கீர்த்தி எச்சரிச்சிருக்காங்க.
கீர்த்தி ஷெட்டி இந்த விவகாரத்தை லீகல் ரீதியா கொண்டு போக பிளான் பண்ணிருக்காராம். சைபர் கிரைம் போலீஸ் கிட்ட புகார் கொடுத்து, இந்த தப்பை பண்ணவங்களை பிடிச்சு தண்டனை வாங்கி கொடுக்கணும்னு முடிவு பண்ணிருக்காங்க. திரைத்துறையில இருக்குற மத்த நடிகைகளும் இப்போ கீர்த்திக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர்றாங்க. டெக்னாலஜி வளருறது நல்லது தான், ஆனா அது மத்தவங்களோட கண்ணியத்தை பாதிக்கக் கூடாதுன்னு ரசிகர்கள் இப்போ கமெண்ட் பண்ணி வர்றாங்க.













