---Advertisement---

உள்ளாடை அணியாமல் இருப்பார் அபிராமி – மதுமிதா கொடுத்த அதிர்ச்சி பேட்டி

By Sri
Published on: September 9, 2019
---Advertisement---

பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய மதுமிதா கொடுத்து வரும் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கையை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதால் அவர் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. அவர் கையில் இருந்த கட்டும் அதை நிரூபித்தது. அதன்பின், சம்பள பாக்கியை தரவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், விஜய் டிவி மீது மதுமிதாவும் புகார் கொடுத்தார்.

abirami

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ‘தமிழகம் பற்றி ஒருவரியில் நான் ஒரு கவிதை சொன்னேன். அதனை ஒளிபரப்ப முடியாது என பிக்பாஸ் தெரிவித்தார். இதைக்கேட்டு அங்கிருந்த 8 பேரும் என்னை கிண்டலடித்தனர். என்னை பார்த்து சிரித்தனர். அதனால் மனமுடைந்து நான் கையை அறுத்துக் கொண்டேன். அப்போதும் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தனர். சேரன் சாரும், கஸ்தூரியும் மட்டுமே எனக்கு ஆதரவாக இருந்தார்கள்’ என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், அபிராமி உள்ளாடையே அணிய மாட்டார். டிரான்ஸ்பிரண்டான ஆடைகளை அணிந்து அங்கும் இங்கும் வலம் வருவார். அதேபோல், சாச்ஷி உள்ளாடை போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்திருப்பார் என மதுமிதா அந்த பேட்டியில் கூறியுள்ளார். மதுமிதாவின் புகாருக்கு அபிராமியும், சாக்‌ஷியும் என்ன பதிலளிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.