.”கலங்கரை விளக்கம்” படத்தில் எம். ஜி.ஆர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட விட்டதாம். நாகேஷ், எம்.ஜி.ஆர் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டுமே பாக்கி இருந்ததாம். நாகேஷை தொலைபேசியில் அழைத்த எம்.ஜி.ஆர் என்னைப்போன்ற சின்ன நடிகர்கள் எல்லாம் நடிக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.
உங்களை போன்ற பெரிய நடிகர்களின் காட்சி மட்டும் தான் பாக்கியிருக்கிறது. அதனால் கால்ஷீட் கொடுங்கள் என கேட்டாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நாகேஷ் இரண்டு நாட்கள் கால்ஷீட் கொடுத்தாராம். எம்.ஜி.ஆர். போன்ற பிரபலம் தன்னை பார்த்து இப்படி சொல்லியது தன்னுடைய மெத்தனத்தை சுட்டிக்காட்டியதாக நினைத்து வருந்தியிருக்கிறார்.

அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்படி இருக்கும் பொழுது நாகேஷ், எம்.ஜி.ஆரை பார்த்து துவக்கத்தில் என்னிடம் என்ன சொன்னீர்கள் என்றால் தயாரிப்பாளர்கள் உன்னை தேடி வரும் பொழுது அவர்களுக்கு தேதி கொடுத்து விட்டால் அந்த தேதியில் சென்று நடித்து விடு இல்லை அவர்களுக்கு நஷ்டமாகி விடும் என்று சொல்லி இருந்தீர்கள்.
நீங்களும் கால்ஷீட் கொடுத்துவிட்டு அதை கேன்சலும் பண்ணி இருக்கீங்களே?. அப்ப நான் கேன்சல் பண்ணா மட்டும்தான் நஷ்டம் வருமா?, நீங்க பண்ணா நஷ்டம் வராதா? என பகீர் என்று ஒரு கேள்வியை எம்.ஜி.ஆரிடம் நேருக்கு நேராக கேட்டுயிருக்கிறார் நாகேஷ். அந்த கேள்விக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தாராம் எம்.ஜி.ஆர். அதன் காரணம் என்னவென்று நாகேஷுக்கு தெரிந்திருக்குமா என தெரியாது. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு எம்ஜிஆர் சொல்லியதன் அர்த்தம் நிச்சயமாக தெரிந்திருக்கும்.









