முகமறியான் எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெற்ற தாய் தந்தையை எவ்விதத்திலும் கைவிடக்கூடாது என தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார்.
அப்போது புராணத்தை இழுத்து அதில் இருந்து உதாரணம் சொன்ன கே.ராஜன் ஒரு பழத்தை பெறுவதற்காக அப்பா அம்மாதான் உலகம் என உண்மையை புரிந்து விநாயகர் அந்த பழத்தை பெற்றுக்கொண்டதாக புராணம் சொல்கிறது. இது தெரியாத தறுதலை மயிலை எடுத்து உலகத்தை சுற்றி வந்ததது என கூறியுள்ளார்.
இதற்கு தமிழர் கடவுள் முருகனை மிகவும் மோசமாக பேசியுள்ளதாக ஹிந்து அமைப்புகளில் ராம ரவிக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கே.ராஜனை கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.







