---Advertisement---

மஹாத்மா காந்தி நினைவு- கமல்ஹாசன் இரங்கல்

Published on: January 30, 2022
---Advertisement---

தேசத்துக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தேசப்பிதா மஹாத்மா காந்தியடிகள். 1948ம் ஆண்டு இதே நாளில் கோட்சேயால் சுட்டுகொல்லப்பட்டார்.

ஜனவரி 30 இன்று அவரின் நினைவு நாளாகும் இதையொட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசனின் அறிக்கை.

மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்.

என கமல் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.