கொரோனாவின் வீரியமான ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் உலகம் முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவிலும் வட இந்தியாவில் ஓமிக்ரான் கட்டுப்பாடுகள் அதிகமாகி வருகின்றன.
தமிழ்நாட்டிலும் சிறிது சிறிதாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் முதல் வார விடுமுறை நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என தெரிகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான உத்தரவு இதுவரை வராத நிலையில் தடை உத்தரவு விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.













