முன்னாள் அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அப்போதைய முதல்வர் எடப்பாடியுடன் நெருக்கம் கொண்டிருந்த அமைச்சர்களில் இவரும் ஒருவர்.
மேலும் அரசை வழிநடத்தும் முக்கிய அமைச்சர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் இன்று அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அவரின் மகனுக்கு சொந்தமான சேலம், பள்ளிபாளையம், கரூர் உள்ளிட்ட அவரின் இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.







