---Advertisement---

வில்லனாக களமிறங்குகிறார் வெங்கட்பிரபு!

By Sri
Published on: April 7, 2019
வில்லனாக களமிறங்குகிறார் வெங்கட்பிரபு
---Advertisement---

வைபவ் நடிக்கவிருக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் வெங்கட் பிரபு. ஜெயம் ராஜாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஜி. சார்லஸ் இந்த படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக களமிறங்குகிறார்.

‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ , ‘சென்னை 28’ போன்ற படங்களில் குணச்சத்திர வேடங்களில் நடித்தவர் நிதின் சத்யா.ஜெய் நடித்த ‘ஜருகண்டி’ படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். ‘ஷ்வேத் நிதின் சத்யா’ என்ற நிறுவனம் மூலம் இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்க உள்ளார்.இப்படத்தில், வைபவ்விற்கு ஜோடியாக சின்னதிரை பிரபலம் வாணி போஜன் நடிக்கவுள்ளார். இதுவே அவரது முதல் வெள்ளித்திரை படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி என பலரும் நடிக்கவுள்ளனர். ‘பிசாசு’ , ‘சவரகத்தி’ போன்ற படங்களில் இசையமைத்த அரோல் கரோலி இப்படத்தில் இசையமைக்கிறார்.இந்நிலையில், வெங்கட் பிரபு காவல் அதிகாரியாக நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.