தமிழகத்தில் சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் கிலோ 140 வரை தக்காளி விற்கப்பட்டு வருகிறது. விலை உயர்ந்த ஆப்பிள் பழமும், தக்காளி பழமும் ஒரே விலையில் விற்கப்படுவதாக மீம்ஸ்கள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடலூரின் செல்லங்குப்பம் பகுதியில் வியாபாரி ஒருவர், ஒரு கிலோ தக்காளி ரூ.30க்கு மட்டுமே விற்று வருகிறார். ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே விற்கப்படும் என வியாபாரி அறிவித்துள்ளதால் அவரது கடையின் முன்பு வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.







