தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருகை பதிவேடுகளை பார்வையிட்டு பின்பு போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் இது குறித்து பெண்ணாகரம் காவல் ஆய்வாளர் மாணிக்கவாசகம் என்பவர் நெகிழ்ச்சியாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய 36 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரு முதலமைச்சர் நடந்துகொண்டதில்லை. சாதாரண எஸ்.ஐ உட்காரும் நாற்காலியில் அமர்கிறார் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
https://twitter.com/sunnewstamil/status/1443460035812605959?s=20







