அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரஞ்சித் முதல் படத்திலேயே பேசப்பட்டார். அடுத்த படமாக மெட்ராஸ் படத்தை இயக்கி பெயர் பெற்றவுடன் மூன்றாவது படமாக ரஜினியை இயக்கும் கபாலி பட வாய்ப்பு கிடைத்தது.
அடுத்த படமும் காலாவாக ரஜினியை இயக்கி மோஸ்ட் வாண்டட் இயக்குனராக ரஞ்சித் மாறினார். இந்த நிலையில் தற்போது ஆர்யாவை வைத்து இயக்கிய சார்பட்டா பரம்பரை படமும் சக்கை போடு போடுவதால் ரஞ்சித்தின் இயக்குனர் மார்க்கெட் மிக வேகமாக எகிறியுள்ளது.
இவர் அடுத்ததாக விஜயை வைத்து இயக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படம் செய்ய இருக்கிறாராம். சூப்பர் ஹீரோ என்றால் கற்பனை அல்ல கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள விசயத்தை சொல்ல இருக்கிறாராம்.









