கல்கி எழுதிய பிரமாண்ட கதையான பொன்னியின் செல்வனை படமாகவே எடுக்க முடியாது என்ற நிலை ஒரு காலத்தில் சினிமாவிலும் சீரியலிலும் இருந்து வந்த நிலையில் சில வருடங்கள் முன் இயக்குனர் மணிரத்னம் அதை படமாக இயக்க போவதாக செய்திகள் வந்தன.
சொன்னபடியே இயக்குனர் மணிரத்னமும் அதை படமாக இயக்கி முடிக்க இருக்கிறார். கார்த்தி, விக்ரம் என பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளனவாம்.
80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த மாதம் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளதாக தெரிகிறது.







