திரைப்பட நடிகர்களில் ஒரு சிலரே மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக மக்களின் கண்ணுக்கு தெரிகின்றனர். ரஜினிகாந்த் அதில் முக்கியமானவர். அதைப்போலவே நடிகர் அர்ஜூனும் தீவிரமான பக்தி மார்க்கத்தில் உள்ளவர். ஆஞ்சநேயரின் பக்தர்.
இவர் நீண்ட காலமாகவே ஆஞ்சநேயருக்காக சென்னை கெருகம்பாக்கத்தில் ஒரு கோவில் கட்டி வந்தார்.
தனது கோவில் வேலைகளை அர்ஜூனே முன்னின்று பார்ப்பது போன்ற படங்களும் சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில் அர்ஜூன் மிகப்பெரிய அளவில் தனது கோவிலில் ஆஞ்சநேயர் உட்கார்ந்திருப்பது போன்ற சிலையை நிறுவியுள்ளார். நேற்று இக்கோவிலின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.







