இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அறியாதோர் இருக்க முடியாது. அப்படி விடுதலைப்புலிகளையும் ஈழ விடுதலைக்கு போராடியவர்களையும் அந்த நேரத்தின் சூழல்களை தத்ரூபமாக இயக்கியுள்ளார் இயக்குனர் கிட்டு.
Rise of karikalan’ என்கிற பெயரில், குறும்படமாக முதலில் இப்படத்தை இவர் இயக்கியுள்ளார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, சுமேஷ்குமார், குகன் குமார் எனும் நண்பர்கள் ‘Crowd funding’ மூலமாக முழு நீளத் திரைப்படமாக எடுக்கலாம் என ஆலோசனை தந்ததன் அடிப்படையில் இப்படத்தை. இயக்கி வெற்றி பெற்றுள்ளார் இவர். பி.எஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.







