கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த படம் முந்தானை முடிச்சு திரைப்படம். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தாய்மார்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது தியேட்டர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தின் முருங்கைக்காய் சமாச்சாரங்களும், இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களும் இன்று வரை மறக்க முடியாதவை. பாக்யராஜ் இயக்கி நடித்திருந்தார்.
இந்த படம் 30 வருடங்களுக்கு பிறகு ரீமேக் ஆகி வருகிறது. சில கதை மாற்றங்களுடன். சசிக்குமார் நடிக்க சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன் இயக்குகிறார்.
இந்த படத்தின் ஸ்க்ரிப்டை தொட்டு பாக்யராஜ் படக்குழுவினரிடம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.









