ஒரு காலத்தில் விஜய், அஜீத், பிரசாந்த் என்ற வரிசைதான் இருந்தது. முன்னணி நடிகராக இருந்த பிரசாந்த் சில வருடங்களாக அதிக படங்கள் நடிப்பதில்லை, நடித்தாலும் பெரிதாக ஓடுவதில்லை.
இந்நிலையில் பிரசாந்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அந்தாதூன் பட ரீமேக் உரிமையை பிரசாந்த் அப்பாவும் நடிகருமான தியாகராஜன் வாங்கியுள்ளார். அந்த படத்தை முதலில் மோகன் ராஜா இயக்க இருந்த நிலையில் அவர் திடீரென விலகி கொண்டார்.
தற்போது ப்ரெட்ரிக் என்பவர் இயக்குகிறார்.இப்படத்தில் சிம்ரனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவில் சிம்ரனும் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.








