---Advertisement---

கொடைக்கானலுக்கு செல்ல புது பாதை உருவானது- விரைவில் திறப்பு

Published on: December 23, 2020
---Advertisement---

திண்டுக்கல் மாவட்டம் மலைவாசஸ்தலமான மலைகளின் இளவரசி என அழைக்க கூடிய கொடைக்கானலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர்.

கொடைக்கானல் செல்வதற்கு வத்தலக்குண்டு சென்று அங்கிருந்து மலைப்பாதையில் செல்வதுதான் முக்கிய பாதையாக உள்ளது. பழனியில் இருந்தும் ஒரு வழி உள்ளது இருந்தாலும் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய வழி, வத்தலக்குண்டு வழியாக செல்வதுதான்.

தற்போது தேனி வழியாக கொடைக்கானல் செல்ல புதிய பாதை பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கடந்த எம்.ஜி.ஆர் ஆட்சியில் பரிசீலிக்கப்பட்ட இந்த பாதை கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வளர்ச்சிப்பணிகள் நடந்து திடீரென கிடப்பில் கிடந்துள்ளது.

தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் முயற்சியால் வேலைகள் முடுக்கி விடப்பட்டு 95 சதவீத பணிகள் முடிந்து சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இருப்பினும் முறைப்படி பாதை திறக்கப்படும் வரை வனத்துறை அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.

பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவி மற்றும் அடுக்கம் கிராமம் வழியாக பாதை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.