நிவர் புயல் காரணமாக தமிழக அரசு சீரிய நடவடிக்கைகளை எடுத்தது. பேரிடர் மேலாண்மைத்துறை போன்ற துறைகள் நிவர் புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக பாதிப்புகளை தயார் நிலையில் இருந்தது.
புயல் அடிக்கும்போது மின்சாரம் இருக்க கூடாது என்ற காரணத்துக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மக்கள் பலர் இதனால் நேற்று கடும் விரக்திக்குள்ளாயினர். இருப்பினும் புயலால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கவே மின்சாரம் தடை செய்யப்படுகிறது என்பதை புரிந்து கொண்டனர்.
இருப்பினும் புயல் வலுவிழந்ததால் பெரிய பிரச்சினையாக ஆகவில்லை. இதனால் மின்சாரம் சீராக சென்னை மாநகரின் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதை முன்னாள் எம்.எல்.ஏவும் நடிகருமான எஸ்.வி சேகர் பாராட்டியுள்ளார்.
நிவர் புயலுக்குப்பின் இன்று காலை என் தெரு. இரவு 10-11தவிர தடையில்லா மின்சாரம். Our Sincere Thanks to TNEB Foreshore Estate & Greater Chennai Corporation 126 for their support & maintenance. 💐💐👍🇮🇳THANK U CM 🙏@CMOTamilNadu @OfficeOfOPS @chennaipolice_ @PThangamanioffl 💐 pic.twitter.com/x34Dre4UDm
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) November 26, 2020









