நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அனுதீப் என்பவர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பெயரிடப்படாத நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதிகளில் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் கதை என்னவென்றால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்ணை ஹீரோ காதலிப்பதுதான் கதையாம்.
இந்த கதையில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஸப்கா என்ற நடிகை சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர், உக்ரேனிய படமான ‘எடர்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.









