இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகரான ராம்சரண் தமிழ் ரசிகர்களும் நன்கு அறிந்தவர்தான்.
இந்த படத்துக்கு கார்த்திக் சுப்புராஜ்தான் கதை எழுதியுள்ளாராம். அரசியல் பின்னணி உள்ள இந்த கதையை கார்த்திக் சுப்புராஜிடமிருந்து ஷங்கர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியன் 2′, ‘ராம்சரண் படம்’ ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள படத்தையும் இயக்கவுள்ளார் ஷங்கர். இது தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் ஆகும்.









