சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அதற்கு முன் சமுத்திரக்கனி இயக்குனராக மட்டுமே இருந்தார். இப்படத்தில் சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனியின் நட்பு அடுத்து சமுத்திரக்கனியின் படமான நாடோடிகள் படத்தின் மூலம் வலுப்பெற்றது.
இந்த படத்தின் மூலம் இவர்கள் நட்பு வலுப்பெற்று அண்ணன் தம்பி என்று உரிமையுடன் கூப்பிட்டு கொள்ளும் அளவு இவர்கள் பாசம் உள்ளது.
சசிக்குமார் பகைவனுக்கு அருள்வாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் சசிக்குமாருக்கு தனது வாழ்த்துக்களை சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
என் தம்பி சசிகுமாரின் அடுத்த திரைப்படம் ஆரம்பம்… இயக்குனர் அனிஸ் அவர்களுக்கும்,தயாரிப்பாளர் தம்பி கிஷோர் அவர்களுக்கும் மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…என சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
