---Advertisement---

விவாகரத்து தொடர்பாக நான் சொன்னதாக சொன்னது தவறானது- நாகார்ஜூனா

Published on: January 28, 2022
---Advertisement---

நடிகர் நாகார்ஜூனின் மகன் நாகசைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் சில வருடங்கள் முன் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இவர்கள் விவாகரத்தை விரும்பி பெற்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் விவாகரத்தை இருவரும் பெற்ற நிலையில் நாகார்ஜூனா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் சமந்தாதான் விவாகரத்தை முதலில் விரும்பி கேட்டதாக நாகார்ஜூன் கூறியதாக தகவல் வெளியானது.

இந்த செய்தி தொடர்பாக தற்போது நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

சமூக ஊடகங்களிலும் டிஜிட்டல் ஊடகங்களிலும் நாகசைதன்யா – சமந்தா குறித்து நான் கூறியதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது மற்றும் முட்டாள்த்தனமானது. வதந்திகளை செய்திகளாக வெளியிட வேண்டாம் என்று மீடியா நண்பர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.