இயக்குனர் பா.ரஞ்சித் “அட்டகத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்க, நந்திதா ஸ்வேதா நடித்திருப்பார், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தனது படங்களின் கருத்துக்களாக எடுத்து கொண்டு இயக்கி வருபவர் இவர்.
ரஜினியை வைத்து “கபாலி”, “காலா” என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். “கபாலி” மலேசியாவை களமாக மையமாக வைத்தும், ‘காலா”மும்பையை வைத்தும் படமாக்கபட்டிருக்கும். நானா படேகர் ஹரி தாதாவாக படத்தில் ரஜினியுடன் போட்டி போட்டிக்கொண்டு நடித்திருந்தார்.

எப்பவும் போல ஸ்டைல் குறையாத ரஜினி, கருப்பு வேஷ்டி, கருப்பு சட்டை, கூலிங் கிளாஸ் என அசத்தலாக வந்திருப்பார். ரஜினிக்கு மனைவியாக ஈஸ்வரி ராவ், முன்னாள் காதலியாக ஹுமா குரேஷி நடித்திருந்தனர். சமுத்திரக்கனி படத்தில் நடித்து பலம் சேர்த்திருப்பார். சந்தோஷ் நாராயணன் இசையில் படம் வெளிவந்தது.
மும்பை வாழ் தமிழர்களின் உரிமை பிரச்சனையை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பார் பா.ரஞ்சித். “வேங்க மவன் ஒத்தயில நிக்கேன், தில்லிருந்தா மொத்தமா வாங்கலே” படத்தில் மிக பிரபலமான ரஜினி பேசியிருந்த பஞ்ச் டயலாக். காலா சேட் நா போலாமா? என ரஜினியிடம் பம்மிய ஹரி தாதா நானா படேகர் வசனம் தியேட்டரில் விசில் சத்தத்தை பறக்க விட்டது.
கடந்த 2018ம் வருடம் இதே ஜூன் மாதம் ஏழாம் தேதி தான் “காலா” வெளியானது, மலேசியாவில் மட்டும் முதல் நாளே அதாவது 6ம் தேதியே வெளியானது. “காலா” சினிமாத்திரையில் கால் வைத்து ஆறு ஆண்டுகள் முடிவடைந்து ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ரஜினியை வைத்து ரஞ்சித் காட்டிய ரவுசு ரஜினி ரசிகர்களால் அதிகமாக பேசப்பட்டது அந்த நேரத்தில்.தனுஷ்தான் “காலா”வின் தயாரிப்பாளர்.









