தமிழர்கள் அனைவரும் தீபாவளி, பொங்கல், தவிர்த்து கொண்டாடும் மூன்றாவது பெரிய பண்டிகை தமிழ்ப்புத்தாண்டு. சித்திரை முதல் பங்குனி வரையிலும் உள்ள மாதங்களும் பிரபவ முதல் அட்சய வருடம் வரை 60 வருடமுமே தமிழ்ப்புத்தாண்டு ஆகும்.
இந்த வருடம் பிலவ வருடம் பிறக்கிறது இதற்கு முன் 1961ல் பிலவ வருடம் பிறந்திருக்கிறது அதற்கு பின் தற்போதுதான் பிலவ வருடம் வந்துள்ளது.
அந்தக்காலங்கள் போல் இந்தகாலங்கள் இனிமையாய் இல்லை. பரபரப்பான வாழ்க்கை முறை , நிம்மதியற்ற வாழ்க்கையாய் பலருக்கும் சென்று கொண்டிருக்கிறது.
இந்த புத்தாண்டு முதலாவது துன்பங்கள் குறைந்து இன்பங்கள் நிறைந்து அனைவர் வாழ்விலும் சகல செல்வமும் மகிழ்ச்சியும் நிலைக்க வேண்டும்.
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.







