இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் சிம்புதேவன். இவர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கினார். பின்பு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
தற்போது ஷங்கருக்கும் அந்நியன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கும் கதை உரிமையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதில் ஷங்கர் தன் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துவிட்டார் என் கதை உரிமையில் யாரும் குறுக்கிட முடியாது என்பது ஷங்கரின் நிலைப்பாடு.
இதற்கு அவரது சிஷ்யரும் இயக்குனருமான சிம்பு தேவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐ சப்போர்ட் டைரக்டர்ஷங்கர் என்ற ஹேஷ்டேக்கை டிரண்ட் ஆக்க முயன்று வருகிறார்.
I stand with Director & Writer @shankarshanmugh Sir..👍👍👍#ISupportDirectorShankar pic.twitter.com/e3WA5wiyjW
— Chimbu Deven (@chimbu_deven) April 15, 2021







